ஜூலை 31 வரை ராமேஸ்வரம் மீனவர் 15 பேருக்கு காவல்

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை ஜூலை 31 வரை சிறை காவலில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து ஜூன் 28 மற்றும் ஜூலை 1ல் மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் இரு படகுகளையும், அதில் இருந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

காவல் தேதி முடிந்ததையடுத்து நேற்று மீனவர்கள் 15 பேரையும் போலீசார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜூலை 31 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் மீனவர்களை மீண்டும் வவுனியா சிறையில் அடைத்தனர். மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவர்களின் உறவினர்களுக்கு மீண்டும் சிறையில் அடைத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement