ஏர் ஹாரன்கள் பறிமுதல் அபராதம் விதிப்பு
புதுச்சேரி: பஸ், லாரிகளில் பயன்படுத்திய ஏர்ஹாரன்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் ஏர் ஹாரன்களை பயன்படுத்துவதால், வாகன ஓட்டிகளுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்து நடக்கிறது. ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவதால், ஒலி மாசுபாடு ஏற்படுவதாக, டி.நகர் போலீசாருக்கு பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதைதொடர்ந்து வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார், எல்லைப்பிள்ளைச்சாவடி சாலையில், நேற்று வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, பஸ், லாரிகளில் இருந்து ஏர் ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்து, தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து, அந்த வழியாக 40 கி.மீ.,க்கு மேல் அதிக வேகத்தில் வந்த வாகனங்களை நிறுத்தி, அபராதம் விதித்து, வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர்.
மேலும்
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
-
ஊழல் கவுன்சிலர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை; பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்