வீட்டுமனை தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே முன் விரோத தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த வடபூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கண்ணு, 55; இவரது அண்ணன் முனுசாமி, 58; இருவருக்கும் வீட்டுமனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.

கடந்த மே 23ம் தேதி முத்துக்கண்ணு வீட்டில் இருந்தபோது முனுசாமி, இவரது மகன்கள் சுரேஷ்குமார், வினோத்குமார் ஆகியோர் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார், முனுசாமி உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement