புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்க விழா

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்க விழா நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி தலைமை தாங்கி எழுத்தறிவு திட்டத்தை துவக்கி வைத்தார்.

தன்னார்வலர் கமலி எழுத்தறிவு திட்டம் குறித்து விளக்கி பேசினார். 20க்கும் மேற்பட்ட கற்கும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தினமும் பள்ளியில் மாலை வேலையில் எழுத்தறிவு வகுப்பு நடக்கிறது.

Advertisement