போக்சோவில் வாலிபர் கைது  

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே, 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த, 15ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரில், கெடார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர்.

இதில் தர்மாபுரியை சேர்ந்த கங்காதரன் மகன் சரவணன், 24; மாணவியை கடத்தி திருமணம் செய்தது தெரியவந்தது. போலீசார் அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Advertisement