முந்திரி தோப்பில் மூதாட்டி சடலம்

விழுப்புரம்: வானுார் அருகே முந்திரி தோப்பில் காணாமல் போன மூதாட்டி இறந்து கிடந்தார்.

வானுார் அருகே இலவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்மாள்,85; மனநலம் பாதித்தவர். கடந்த 10ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர், ராமநாதபுரம் கிராமத்தில் சிவராமன் என்பவரின் முந்திரி தோப்பில் நேற்று அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இவர், எப்படி அங்கு சென்றார், இறந்த விபரம் குறித்து வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement