ரூ.36 கோடி ஹெராயின் மிசோரமில் பறிமுதல்

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பும், அசாம் ரைபிள்ஸ் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், 36 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின், மெத்ஆம்பெட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வடகிழக்கு மாநிலமான மிசோரத்தின் சாம்பாய் மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தில் இருப்பதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அசாம் ரைபிள்ஸ் படையினருடன் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், 642 கிராம் ஹெராயின் மற்றும் 10.44 கிலோ மெத்ஆம் பெட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 36.79 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதை மாத்திரைகளை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாக அசாம் ரைபிள்ஸ் படையினர் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீதிபதி யஷ்வந்த் பதவி நீக்கத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தகவல்
-
கருணாநிதியின் மூத்த மகன் முத்து காலமானார்!
-
அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி; பிரிக்ஸ் அமைப்பு மீது டிரம்ப் குற்றச்சாட்டு
-
உயிருக்கு ஆபத்து: டி.எஸ்.பி. சுந்தரேசன் கண்ணீர்
-
ரூ.1 கோடி 'டிஜிட்டல்' கைது மோசடி; முதல்முறையாக மேற்கு வங்கத்தில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
-
இரண்டு முதல்வர்களை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரி திடீர் ராஜினாமா
Advertisement
Advertisement