வயிற்று வலியால் மாணவி தற்கொலை

அரியாங்குப்பம் : வயிற்று வலி காரணமாக எலி பேஸ்ட் சாப்பிட்டு, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகள் குணஸ்ரீ, 19. இவர், புதுச்சேரி அரசு மகளிர் கல்லுாரியில், பி.ஏ., வரலாறு இரண்டாமாண்டு படித்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 16ம் தேதி, கல்லுாரிக்கு சென்று விட்டுக்கு பஸ்சில் வந்தார்.

தவளக்குப்பம் அருகே வரும் போது, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த எலி பேஸ்டை சாப்பிட்டு, வீட்டுக்கு வந்தவுடன் மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement