'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை

மதுரை: ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு, மொபைல் போனில் ஓ.டி.பி., எண் பெறுவதற்கு, ஐகோர்ட் மதுரைக்கிளை இடைக்கால தடைவிதித்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
* உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க.,நடத்தலாம். ஆனால் ஓ.டி.பி., விவரங்களை கேட்கக் கூடாது.
* டிஜிட்டல் முறையில் தனி நபர் தகவல் பாதுகாக்கப்படுவது பற்றி மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்.
* ஓ.டி.பி., விவரங்களை கேட்க வேண்டாம் என்று போலீசார் கூறும் நிலையில் எதற்காக கேட்கிறார்கள்.
* ஆதார் விவரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம் இதனை விற்பனை செய்தால் என்ன செய்வது?
* சேகரிக்கப்படும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்த திட்டங்கள் இல்லை.வாக்காளர்களின் தனிநபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்.
* மொபைல் போனில் ஓ.டி.பி., எண் பெறுவதற்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.









மேலும்
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பலி
-
பணமூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க எம்.பி.க்கள் 200 பேர் பார்லியில் தீர்மானம் தாக்கல்
-
கதண்டு வண்டு கடித்ததில் தம்பதி பலி; தென்காசியில் சோகம்
-
''கூட இருந்து குழி பறித்தவர் அன்வர் ராஜா'': பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத்
-
விமான விபத்து விசாரணையில் உண்மையின் பக்கம் நிற்க விரும்புகிறோம்; பார்லி.யில் மத்திய அரசு விளக்கம்