மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், கள்ளச்சந்தை மது விற்பனை களைகட்டியது. காலை 6 மணி முதல் டாஸ்மாக் கடை அருகில் திறந்த வெளியில் மதுபானம் விற்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் கடந்த நவம்பர் மாதம் மயிலாடுதுறை டி.எஸ்.பி.,யாக பதவி ஏற்றதில் இருந்து சட்டவிரோதமாக செயல்பட்ட 23 பார்களை பூட்டி சீல் வைத்தார்.
இது சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில், தன் வாகனம் பறிக்கப்பட்டது தொடர்பாக சுந்தரேசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேல், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் வற்புறுத்தலின் பேரில் தான் பழிவாங்கப்படுவதாக இவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதையடுத்து, டி.எஸ்.பி., சுந்தரேசனை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தது.
இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அடுத்த நாளில் இருந்து மயிலாடுதுறை பகுதியில் சட்டவிரோதப் பார்கள் திறக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சித்தர்காடு பகுதியில் உள்ள காவிரிக்கரை அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையில் பொது வெளியில் அட்டைப்பட்டியில் வைத்துக் கொண்டு மது விற்பனை வெளிப்படையாக நடந்து வருகிறது. பணம் வசூல் செய்வதற்கு வசதியாக, 'க்யூஆர்' கோடு கூட வைத்திருக்கின்றனர்.
திறந்த வெளியில் மதுபானம் விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வாசகர் கருத்து (15)
panneer selvam - Dubai,இந்தியா
21 ஜூலை,2025 - 16:14 Report Abuse

0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
21 ஜூலை,2025 - 16:03 Report Abuse

0
0
Reply
vee srikanth - chennai,இந்தியா
21 ஜூலை,2025 - 16:02 Report Abuse

0
0
Reply
karthik - chennai,இந்தியா
21 ஜூலை,2025 - 15:36 Report Abuse

0
0
Reply
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
21 ஜூலை,2025 - 14:44 Report Abuse

0
0
Reply
VSMani - ,இந்தியா
21 ஜூலை,2025 - 14:41 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
21 ஜூலை,2025 - 14:15 Report Abuse

0
0
Reply
bogu - ,
21 ஜூலை,2025 - 13:39 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21 ஜூலை,2025 - 13:23 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
21 ஜூலை,2025 - 13:10 Report Abuse

0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பொறுப்பு ஏற்பு
-
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்: வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி
-
பணமூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க எம்.பி.க்கள் 200 பேர் பார்லியில் தீர்மானம் தாக்கல்
-
கதண்டு வண்டு கடித்ததில் தம்பதி பலி; தென்காசியில் சோகம்
Advertisement
Advertisement