ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: -இந்திய எல்லையில் நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து விரட்டியடித்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 380 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய - இலங்கை எல்லையில் மீன்பிடித்த போதுஅங்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.

அச்சமடைந்தவர்கள் கடலில் வீசிய வலையை அவசரமாக படகில் இழுத்து வைத்துக்கொண்டு ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு திரும்பினர். எதிர்பார்த்த மீன்கள் கிடைக்காததாலும், பெரும்பாலானோர் வெறும் படகுடன் திரும்பியதாலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

Advertisement