பணியிடங்களில் பாலியல் புகார் அளிக்க உள்ளக குழு அவசியம் தொழிலக இணை இயக்குனர் அறிவுரை
சிவகாசி,: மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் அளிக்க உள்ளக குழு அமைக்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு, சுகாதாரம் இணை இயக்குனர் ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு: பணியிடங்களில் இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களை பாதுகாக்கவும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணவும் பணியிடத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013 இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரியும் அனைத்து பணி இடங்களிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க உள்ளக புகார் குழு அமைக்கப்படுவது கட்டாயம்.
இச்சட்டத்தின்கீழ் வேலை அளிப்பதற்காக வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற தவறும் பட்சத்தில் அந்த வேலை அளிப்பவர் மீது ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
எனவே அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில் வேலை அளிப்பவர்களால் உடனடியாக உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும்.
இச்சட்டத்தின் வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். உள்ளக புகார் குழுவின் உறுப்பினர்கள் குறித்த விவரங்கள் மற்றும் தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்கள் ஆகியவற்றில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் ஆகியவற்றை தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடத்தில் அனைத்து பணியாளர்களும் தெளிவாக காணக்கூடிய இடத்தில் காட்சிப்படுத்த வேண்டும், என்றார்.
மேலும்
-
அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம்
-
தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி., யார்? சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணியில் தமிழக அரசு!
-
போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை
-
ஜப்பான் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு; பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி
-
காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் பணி மந்தம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
-
அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஹிந்து முன்னணி