சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பொறுப்பு ஏற்பு

சென்னை: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா இன்று பதவியேற்றுக்கொண்டார்.

சென்னை ஐகோர்ட்டின் 36வது தலைமை நீதிபதியான எம்.எம். ஸ்ரீவஸ்தவாவிற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீவஸ்தவா, இதற்கு முன்னர் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

தலைமைச்செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள், ஐகோர்ட் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

Advertisement