திருப்பதி வேங்கடேஸ்வரசுவாமி 26ம் தேதி புதுச்சேரியில் அருள்பாலிப்பு

புதுச்சேரி : புதுச்சேரி வேதபுரி சார்பில், வரும் 26 மற்றும் 27 ம் தேதிகளில் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில், திருமலை திருப்பதி தேவஸ்தான வேங்கடேஸ்வர சுவாமி சேவை சாதிக்கிறார்.

அதனையொட்டி வரும் 26ம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளும் வேங்கடேஸ்வர சுவாமிக்கு, பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்படுகிறது. அங்கு திருவாதாராதனம், தோமாலை மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், அர்ச்சனை நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு கடையநல்லுார் ராஜகோபால்தாஸ் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனமற்றும் ஏகாந்தசேவை நடக்கிறது.

மறுநாள் 27ம் தேதி காலை சுப்ரபாதம், வாசுதேவ புண்ணயாகவாசனம், பூதசுத்தி முதலான கிரியைகள், நித்திய திருவாதாரானம், அபிேஷக சங்கல்பம், அபிேஷக கலச ஸ்தாபனம், சிறப்பு சிருமஞ்சனம், நீராட்டம், தோமாலை, திவ்ய பிரபந்த சேவை, அர்ச்சனை நடக்கிறது.

பின் முதல்கால பூஜை, வேத திவ்ய பிரபந்த ஆகம சாற்றுமுறை, தீபாராதனை, சிறப்பு புஷ்பயாகம், இரண்டாம் கால பூஜை, மகா மங்கள ஹாரத்தி, மகதாசீர்வாதம் நடக்கிறது. பூஜைகள் அனைத்தும், திருமலை திருப்பதி தேவஸ்தான சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சார்யா பகடல் தலைமையில் நடக்கிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேதபாரதி தமிழ்நாடு செயலாளர் வெங்கட்ராமன், புதுச்சேரி தலைவர் பட்டாபிராமனஜ், பஜனோத்ஸவ கமிட்டி தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement