சிறப்பு வழிபாடு

புவனகிரி : புவனகிரி வெள்ளியம்பல சுவாமிகள் மடத்தில் ஆடி கிருத்திகை வழிபாடு நடந்தது.

புவனகிரி வெள்ளியம்பல சுவாமிகள் மடத்தில் உள்ள மீனாட்சி, சுந்தரேஸ்வரர் கோவிலில் முருகர் சுவாமிக்கு ஆடி கிருத்திகையொட்டி நேற்று முன்தினம் மாலை மகா அபிஷேகமும், இரவு மகா தீபாராதனையும் நடந்தது.

முருகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ரத்தினசுப்பிரமணியன் உள்ளிட்ட குழுவினர்கள் செய்திருந்தனர்.

Advertisement