உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியா ரூ.25 கோடி நிதியுதவி
காத்மாண்டு: நேபாளத்தில் கல்வி, சுகாதாரம் உள் ளிட்ட துறைகளை மேம்படுத்தும் வகையில், மத் திய அரசு சார்பில் 24.38 கோடி ரூபாய் நிதியுத வி அளித்துள்ளது. இதற்கான, இரு நாடுகளுக்கு இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
நம் அண்டை நாடான நேபாளத்தின் மாதேஷ் மற்றும் சுதுர்பாச்சிம் மாகாணங்களில் ஏராளமான பள்ளி கட்டடங்களை கட்டமைக்கவும், கந்தாகி மாகாணத்தில் மருத்துவமனையை கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.
இதற்காக, மத்திய அரசு சார்பில் நிதியுதவியாக 24.38 கோடி ரூபாயை, அங்குள்ள நம் நாட்டு துாதரக அதிகாரிகள், நேபாள அரசிடம் நேற்று அளித்தனர்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையே நேற்று கையொப்பமானது. இதன் வாயிலாக இருதரப்புக்கு இடையே நல்லுறவு வலுப்படும் எனவும், அந்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்படும் எனவும் நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்: பவன் கல்யாண் விருப்பம்
-
கன்வார் யாத்திரையில் 150 கி.மீ., துார பயணம்: கணவரை தோளில் சுமந்த நம்பிக்கை பெண்
-
சீன ஓபன் பாட்மின்டன்: இரண்டாவது சுற்றில் பிரனாய்
-
ஜக்தீப் தன்கர் ராஜினாமா: நீதிபதி பதவி நீக்க தீர்மானம் காரணமா?
-
தி.மு.க., கூட்டணி உடைவதற்கான அறிகுறி: அண்ணாமலை
-
41 ஆண்டு கால வரலாறு: இதுவரை யாராலும் முறியடிக்கப்படாத பி.டி.உஷாவின் சாதனை!
Advertisement
Advertisement