ஒடிசா வனத்துறை அதிகாரி வீட்டில் ரெய்டு: தங்கக்காசுகள், ரூ.1.5 கோடி ரொக்கம் பறிமுதல்

புவனேஸ்வர்: முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் வனத்துறை அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் தங்கக்காசுகள் மற்றும் ரூ.1.5 கோடி ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
ஒடிசாவில் ஜஜ்புர் மாவட்டத்தில் வனத்துறை துணை ரேஞ்சராக இருக்கும் ராம சந்திர நேபாக் என்பவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவருக்கு சொந்தமான 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். பல குழுவினர் இணைந்து நடத்திய இந்த சோதனையில், அடுக்குமாடி கட்டடம் ஒன்றில், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை 1.5 கோடி ரூபாய் எண்ணப்பட்ட நிலையில், இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணம் எண்ணும் பணி நடக்கிறது.


2வது ரெய்டு
கடந்த ஒரு வாரத்தில் வனத்துறையில் அதிக சொத்து சேர்த்ததாக நடக்கும் இரண்டாவது ரெய்டு இதுவாகும். இதற்கு முன் கேயின்ஜர் பகுதியில் டிவிஷனல் அதிகாரி நித்யானந்தா நாயக் என்பவரருக்கு சொந்தமான வீட்டில் ரெய்டு நடந்தது. அதில், அவரது பெயரில் 115 இடங்கள் , 200 கிராம் தங்கக்காசுகள், ரைபிள்கள், கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள், ரூ.1.55 லட்சம் ரொக்கம், தேக்கு மரப் பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (5)
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
25 ஜூலை,2025 - 19:56 Report Abuse

0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
25 ஜூலை,2025 - 19:07 Report Abuse

0
0
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
25 ஜூலை,2025 - 19:58Report Abuse

0
0
N Sasikumar Yadhav - ,
25 ஜூலை,2025 - 20:51Report Abuse

0
0
Reply
ஆனந்த் - madurai,இந்தியா
25 ஜூலை,2025 - 18:44 Report Abuse

0
0
Reply
மேலும்
-
உலகின் அதி நம்பிக்கையான தலைவர் மோடி
-
5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நூதன தண்டனை
-
வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி!
-
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்; தமிழக அரசியல் சூழல் குறித்து பேச வாய்ப்பு
-
பீஹாரில் பத்திரிகையாளர்களுக்கு ஜாக்பாட்: ஓய்வூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு
-
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு; 3 நாளில் மட்டும் ரூ.1,760 சரிவு
Advertisement
Advertisement