கருப்பண்ண சுவாமி கோயிலுக்கு 1000 ஆடுகள் நேர்த்திக்கடன்

வத்தலக்குண்டு : திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி கோட்டை கருப்பண்ணசுவாமி கோயில் திருவிழாவில் பக்தர்களால் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகள் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்டன. இவை சுவாமிக்கு பலி கொடுக்கப்பட்டு அனைத்தும் சமைத்து ஆண்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஆடி அமாவாசை முடிந்த முதல் வெள்ளியின்று இக்கோயிலில் திருவிழா நடைபெறும். அதன்படி நேற்று திருவிழா நடக்க சுவாமியிடம் வேண்டிய காரியம் நிறைவேறியதற்காக பக்தர்களால் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகளை நேர்த்திக்கடனாக வழங்கினர். நேற்று இரவு ஆகாச பூஜை முடிந்ததும் ஆடுகள் அனைத்தும் கருப்பணசுவாமிக்கு பலி கொடுக்கப்பட்டு சமைத்து ஆண்களுக்கு மட்டுமே பிரசாதமாக வழங்கப்பட்டது. திண்டுக்கல், வத்தலக்குண்டு, பெரியகுளம் பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பள்ளி திறப்பு விழா: கவர்னர் பங்கேற்பு
-
கால் வாரியது கூகுள் மேப்; காரில் சென்ற பெண் பள்ளத்தில் விழுந்தார்!
-
மாலத்தீவு சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
-
மான்செஸ்டரில் படுமோசம்; 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொதப்பிய இந்திய அணி
-
உலக அளவில் வலிமையான சக்தியாக மாறி வரும் இந்திய ராணுவம்; கார்கில் வெற்றி தினத்தில் ராணுவ தளபதி பெருமிதம்
-
சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு
Advertisement
Advertisement