தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தேனி பஞ்சமி நில பிரச்னையில், தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ஐந்து வாலிபர் களை போலீசார் கைது செய்தனர்.
தேனி, அல்லிநகரத்தை சேர்ந்தவர் நாகராஜ், 56; தி.மு.க., தேனி நகர துணைச்செயலர். இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பஞ்சமி நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு, வருவாய்த்துறை விசாரணை நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், சில மாதங்களாக அந்த இடம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பல்வேறு மோதல்கள் நடந்து வருகின்றன. இதில், நாகராஜும் பங்கேற்றார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சேதுமூர்த்தி, 24, விஸ்வா, 22, உள்ளிட்ட ஐந்து பேர் நாகராஜ் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசினர். நாகராஜ் புகாரில், ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ஐந்து பேரையும், அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பள்ளி திறப்பு விழா: கவர்னர் பங்கேற்பு
-
கால் வாரியது கூகுள் மேப்; காரில் சென்ற பெண் பள்ளத்தில் விழுந்தார்!
-
மாலத்தீவு சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
-
மான்செஸ்டரில் படுமோசம்; 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொதப்பிய இந்திய அணி
-
உலக அளவில் வலிமையான சக்தியாக மாறி வரும் இந்திய ராணுவம்; கார்கில் வெற்றி தினத்தில் ராணுவ தளபதி பெருமிதம்
-
சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது; மத்திய அரசு அறிவிப்பு
Advertisement
Advertisement