பா.ம.க., ராமதாஸ் பிறந்த நாள்

கடலுார்: கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா நெய்வேலியில் நடந்தது.
வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில், நெய்வேலி நகரம் 16வது வட்டம் நடராஜர் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 500 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, நகர செயலாளர்கள் சங்கர்,மணிவண்ணன் உடனிருந்தனர்.
பண்ருட்டி மாரியம்மன் கோவிலில் நகர செயலாளர் ஜெயசீலன் தலைமையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஒன்றிய செயலாளர் மூர்த்தி ஏற்பாட்டில், நத்தம் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, புத்தகங்கள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் பா.ம.க., வன்னியர் சங்கம் சார்பில் 87 மரக்கன்றுகள் நடப்பட்டது.
நெய்வேலி நகரம் 10வது வட்டம் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் ஜெகன் அன்னதானம் வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், மணிவேல், செல்வகுமார், மாவட்ட இளைஞர் சங்க பொதுச் செயலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க விரும்பும் ப.சிதம்பரம்: லோக்சபாவில் அமித் ஷா ஆவேசம்
-
நம் விரல்களை கொண்டே கண்களை குத்தும் சூழ்ச்சி அரசியல்: முதல்வர் ஸ்டாலின்
-
ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் 2வது நாளாக தொடரும் 'ஆபரேஷன் மகாதேவ்'
-
பஹல்காம் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகள்: கல்விச்செலவை ஏற்கிறார் ராகுல்!
-
சர்வதேச புலிகள் தினத்தில் தமிழகம் பெருமையுடன் கர்ஜிக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
பிரதமரிடம் பேசியதால் சிபில் ஸ்கோர்ட் பிரச்னைக்கு தீர்வு; சொல்கிறார் இபிஎஸ்!