வீட்டு மனைப்பட்டா கிராம மக்கள் மனு

கடலுார் : அழகியநத்தம் கிராம மக்கள் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு, மனு அளித்தனர்.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்கில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், கடலுார் அடுத்த அழகியநத்தம் கிராம மக்கள் அளித்த மனு:

அழகியநத்தம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. 40 ஆண்டுகளுக்கு முன் 180 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. தற்போது குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாகி ஒரே வீட்டிலேயே பல குடும்பங்கள் வாழ வேண்டிய சூழல் உள்ளது.

இதனால் கடும் நெருக்கடியில் பொதுமக்கள் வசிக்கின்றனர். எனவே, கிராமத்தில் அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement