சுதந்திர தின விழா கலெக்டர் ஆலோசனை
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில் ஆக., 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளதையொட்டி மைதானம் சீரமைக்கும் பணி, அலுவலர்கள், பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள், பந்தல் அமைத்தல், போலீசார் பாதுகாப்பு பணி, குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிடம் அமைப்பது உட்பட பல்வேறு பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை செய்தார்.
அலுவலர்கள் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள கலெக்டர் அறிவுரை வழங்கினார். இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, தனித்துணை ஆட்சியர் முகுந்தன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
ஓவலில் வெல்லுமா இந்தியா * இங்கிலாந்துடன் இன்று கடைசி டெஸ்ட்
-
அரையிறுதியில் இந்திய அணி * உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில்...
-
அரசு கண்ணில் விரல்விட்டு ஆட்டும் தனியார் அமைப்பு...அராஜகம்: 7 ஏக்கர் இடத்தை மீட்பதில் நான்கு ஆண்டுகளாக இழுபறி
-
காஞ்சிபுரம்: புகார் பெட்டி செய்தி; செடிகளால் துார்ந்த கால்வாய் துார்வாரி சீரமைக்க வேண்டும்
-
காஞ்சிபுரம்: புகார் பெட்டி செய்தி; வர்ணம் பூசாத வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதி
-
தங்கம் வென்றார் ஹர்தீப் * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் அபாரம்