மருந்து என நினைத்து எலி விஷத்தை தின்ற ஏட்டு பலி
மங்களூரு : மருந்து என நினைத்து எலி விஷத்தை தின்ற தலைமை ஏட்டு உயிரிழந்தார்.
தட்சிணகன்னடா, மங்களூரு நகரின், சுரத்கல்லில் வசித்தவர் மஞ்சுநாத் ஹெக்டே, 44. இவருக்கு திருமணமாகி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
மஞ்சுநாத் ஹெக்டே மங்களூரு வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில், தலைமை ஏட்டாக பணியாற்றினார். உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்ட அவர், ஆயுர்வேத மருந்து சாப்பிட்டு வந்தார்.
இவர் நேற்று முன்தினம், மருந்து என நினைத்து, எலி விஷத்தை தின்றுவிட்டார்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை, குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று அவர் உயிரிழந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவ காப்பீடு அட்டைகள் குப்பையில் வீசப்பட்ட அவலம்
-
முட்டை விலை தொடர்ந்து சரிவு
-
6ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்மாயில் கண்டெடுப்பு
-
பதிவுத் தபால் நிறுத்துவதால் ஏற்படும் குழப்பத்தை யார் தீர்ப்பது? வாடிக்கையாளர், மக்களிடம் எழுந்துள்ள கேள்விகள் ஏராளம்
-
மின்சாரம் திருடியவருக்கு ரூ.1.76 லட்சம் அபராதம்
-
பதக்கம் வென்ற மாணவிக்கு 900 மார்க் மருத்துவ சீட்டும் பெற வழி பிறந்தது
Advertisement
Advertisement