மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

வடலுார்: மதுபாட்டில் விற்ற நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

வடலுார் சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று கோட்டைக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக சென்ற நபரை பிடித்து விசாரித்ததில், பார்வதிபுரத்தைச் சேர்ந்த முருகன், 45; என்பதும், மதுபாட்டில் விற்பதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 6 மதுபாட்டில்களை பறிமு தல் செய்தனர்.

Advertisement