சுற்றுலா பயணி வழுக்கி விழுந்து உயிரிழப்பு

சேந்தமங்கலம், திருச்சி, ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 48; பெயின்டர். இவரும், இவரது நண்பர்கள், 10 பேரும் சேர்ந்து, கடந்த, 25ல் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர்.

அவர்கள், கொல்லிமலையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, அங்குள்ள அறப்பளீஸ்வரர் கோவில் பின்புறம் ஓடும் சிற்றருவிக்கு சென்றுள்ளனர்.


அங்கு எதிர்பாராத விதமாக சீனிவாசன் வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்தார்.அவரை மீட்ட நண்பர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார். வாழவந்தி நாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement