மாயனுார் ஆற்று வழித்தடத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி
கிருஷ்ணராயபுரம், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, மாயனுார் காவிரி ஆற்று பகுதியில் பாதுகாப்பாக மக்கள் விழாவை கொண்டாடும் வகையில், காவிரி ஆறு செல்லும் வழித்தடங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுாரில் கதவணை உள்ளது. காவிரி படுகை அருகில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இன்று ஆடி பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அப்போது நுாற்றுக்கணக்கான மக்கள் கோவிலுக்கு செல்வர். மக்கள் பாதுகாப்புடன் காவிரி ஆற்றுக்கு செல்லும் வகையிலும், ஆழமான பகுதிகளுக்கு செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கும் பணியும் நடந்தது.
நீர்வளத்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீஸ்துறைகள் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இறுதிச்சடங்கில் பங்கேற்ற லஷ்கர் பயங்கரவாதிக்கு வலை!
-
ஆந்திராவில் சோகம்: குவாரியில் பாறைகள் சரிந்து 6 பேர் பலி; 10 பேர் படுகாயம்
-
ஸ்பைஸ்ஜெட் ஊழியர் மீது ராணுவ அதிகாரி தாக்குதல்; வீடியோ வெளியாகி பரபரப்பு
-
500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத் தொடங்கிய எரிமலை: ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்; அனைத்து கட்சி கூட்டம் நடத்த திருமா வலியுறுத்தல்
-
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement