போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்
போச்சம்பள்ளி: ஆடிபெருக்கையொட்டி நேற்று போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு, 1,000க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அதேபோல் விவசாயிகள் 500க்கும் மேற்பட்ட கோழிகளை கொண்டு வந்திருந்தனர். இதனால் 12 முதல், 15 கிலோ எடையுள்ள ஆடுகள், 11,000 முதல், 12,000 ரூபாய் வரையும், 15 முதல், 18 கிலோ எடையுள்ள ஆடுகள், 12,000 முதல், 15,000 ரூபாய் வரையும் விற்பனையானது. அதேபோல் கோழிகள் கிலோ 450 முதல், 550 ரூபாய் வரை விற்பனையானது.
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 75 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல் ஆடுகள், கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள், வழக்கத்தை விட, கூடுதல் விலைக்கு விற்றதால், மன நிறைவுடன் சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆக்ராவில் பிறந்த சாகசக்காரர் அர்விந்தர் சிங் விண்வெளிக்கு பயணம்; இவர் யார் தெரியுமா?
-
வங்க மொழி விவகாரம்; மம்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்
-
காஷ்மீரில் 4வது நாளாக தொடரும் ஆப்பரேஷன் அகல்: இதுவரை பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை
-
பிணைக்கைதிகளை சித்ரவதை செய்யும் ஹமாஸ்; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை எதிர்பார்க்கும் இஸ்ரேல்
-
நடைப்பயிற்சி சென்ற தமிழக எம்பி சுதாவிடம் நகை பறிப்பு!
Advertisement
Advertisement