கால்பந்து: இந்தியன் ஆர்மி அபாரம்

ஜாம்ஷெட்பூர்: இந்தியாவின் பாரம்பரிய கால்பந்து தொடர் துாரந்த் கோப்பை. இதன் 134 வது சீசன் தற்போது நடக்கிறது. மொத்தம் 24 அணிகள், 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டி நடக்கின்றன.
நேற்று ஜாம்ஷெட்பூரில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் இந்தியன் ஆர்மி அணி, நேபாளத்தை சேர்ந்த திரிபுவன் ஆர்மி அணிகள் மோதின. போட்டியின் 27வது நிமிடத்தில் கிறிஸ்டோபர் கமேய், ஒரு கோல் அடித்தார். 29 வது நிமிடம் முரட்டு ஆட்டம் ஆடிய திரிபுவன் கோல் கீப்பர் பிகாஷ் குது, 'ரெட் கார்டு' பெற்று வெளியேறினார்.
அப்போது கிடைத்த 'பிரீ கிக்' வாய்ப்பில் கிறிஸ்டோபர், கோல் போஸ்ட் மீது அடித்து வீணடித்தார். முடிவில் இந்தியன் ஆர்மி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 'சி' பிரிவில் 3 புள்ளியுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் ஜாம்ஷெட்பூர் (6 புள்ளி) அணி உள்ளது.

Advertisement