ஆசிட் வீச்சால் பார்வை இழந்தவரின் சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் தர உத்தரவு

செங்குன்றம்: ஆசிட் வீச்சில் பார்வை இழந்த நபரின் மருத்துவ செலவுக்கு, மளிகைக் கடைக்காரர் இரண்டு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்குன்றம் துரை அப்துல்வஹாப் தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் ரங்கநாதன், 55. கடையில், செங்குன்றம் சோலையம்மன் நகரில் வசித்து வரும் வடமாநில வாலிபர் சந்தோஷ், 19 வேலை செய்து வந்தார்.
சம்பள பாக்கி தொடர்பாக, கடந்த மாதம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, சந்தோைஷ ஆசிட் பாட்டிலால், ரங்கநாதன் தாக்கியபோது, கடைக்கு பொருள் வாங்க வந்த ஹூமாயூன் பாஷா, 35, என்பவர் மீது ஆசிட் பட்டு, அவரது கண், முகம் மற்றும் கால் பாதித்தது.
செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிந்து, ரங்கநாதனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஆசிட் பட்டு பார்வை இழந்த ஹூமாயூன் பாஷாவுக்கு, மீண்டும் பார்வை கிடைக்கச் செய்யும் மருத்துவ செலவுக்கான, இரண்டு லட்சம் ரூபாயை, ரங்நாதன் வழங்க வேண்டும்.
மருத்துவ செலவு தொகை கொடுத்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, ரங்கநாதன் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு; ராமதாஸ், அன்புமணி இன்று மாலை நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
-
கல்விக்கொள்கை என்ற பெயரில் திமுக நாடகம்: அண்ணாமலை விமர்சனம்
-
எத்தனால் கலந்த பெட்ரோலால் எந்த பிரச்னையும் இல்லை; ஒரு நிகழ்வு காட்டுங்க பார்ப்போம்: சவால் விட்டார் நிதின் கட்கரி!
-
11ம் வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு ரத்து; இந்தாண்டு முதலே அமல்!
-
சவுதியில் இருந்து திருநெல்வேலிக்கு தமிழர் உடல் அனுப்பி வைப்பு
-
பார்லியில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைப்பு