பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு; நீதிபதி முன் ராமதாஸ் ஆஜராக மாட்டார்

சென்னை: ''ராமதாஸ், அன்புமணி இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆக வேண்டும்,'' என்று ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். பா.ம.க., பொதுக்குழுவை அன்புமணி கூட்டுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார். ஆனால், ராமதாஸ் நீதிமன்றத்துக்கு வர மாட்டார் என அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆக., 17 ல் நடக்கும் என ராமதாஸ் அறிவித்துள்ளார். போட்டிக்கு, ஆக.,9ல் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பும் அறிவித்துள்ளது.
அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு ராமதாஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று (ஆகஸ்ட் 08) ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5:30 மணிக்கு ராமதாஸ், அன்புமணி இருவரும் எனது அறைக்கு வர வேண்டும். உடனே ராமதாஸை கிளம்ப சொல்லுங்கள், இது எனது வேண்டுகோள். அனைவரின் நலனுக்காகவும், பா.ம.க., நலன் கருதியும், இருவரிடம் நானே பேச்சுவார்த்தை நடத்த போகிறேன்.
இருவரிடமும் பேசும் போது கட்சிக்காரர்கள், வழக்கறிஞர்கள் யாரும் உடன் இருக்க கூடாது. நீதிமன்ற வேலை நேரம் முடிந்ததும், இருவரும் எனது அறைக்கு வர வேண்டும்.
இவ்வாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
இந்நிலையில், ராமதாஸ் நீதிபதி முன்பு ஆஜராக மாட்டார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், ராமதாஸ் நீதிமன்றத்துக்கு வர இயலவில்லை என நீதிபதியிடம் கடிதம் கொடுக்க ராமதாஸ் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (7)
நல்லவன் - ,
08 ஆக்,2025 - 14:33 Report Abuse

0
0
panneer selvam - Dubai,இந்தியா
08 ஆக்,2025 - 16:04Report Abuse

0
0
Reply
ஜெகதீசன் - ,
08 ஆக்,2025 - 14:16 Report Abuse

0
0
Reply
Premanathan S - Cuddalore,இந்தியா
08 ஆக்,2025 - 14:08 Report Abuse

0
0
Reply
Bharathanban Vs - tirupur,இந்தியா
08 ஆக்,2025 - 14:02 Report Abuse

0
0
Reply
கிருஷ்ணன் - ,
08 ஆக்,2025 - 13:58 Report Abuse

0
0
Reply
ASIATIC RAMESH - RAJAPALAYAM,இந்தியா
08 ஆக்,2025 - 13:50 Report Abuse

0
0
Reply
மேலும்
-
டிரம்ப்பை கையாள்வது எப்படி: மோடிக்கு ஆலோசனை வழங்குகிறார் நெதன்யாகு
-
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துகின்றனர்: சென்னை ஐகோர்ட் காட்டம்
-
அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்தினால்...: தேர்தல் கமிஷனுக்கு ராகுல் எச்சரிக்கை
-
ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடங்குகிறது; மொத்த பரிசுத்தொகை ₹67 லட்சம்!
-
30 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத சாதனை... யார் இந்த ஜொனாதன் எட்வர்ட்ஸ்?
-
ஆக.13ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
Advertisement
Advertisement