டிப்பர் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

சாத்துார்: சாத்துார் கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் சிவனைந்தபுரம் போலீஸ் செக் போஸ்ட் அருகில் நேற்று காலை 10:00 மணியளவில் கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு நோக்கி சென்ற டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.

லாரியில் இருந்த சோலார் பேனல் அடங்கிய அட்டைப் பெட்டிகள் ரோட்டில் சிதறியது. யாருக்கும் காயமில்லை. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதித்தது.

சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement