போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயார்; புடின் உடன் சந்திப்புக்கு முன் டிரம்ப் பேட்டி

9

வாஷிங்டன்: ''போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயாராக உள்ளது. சமாதானம் செய்ய ரஷ்ய அதிபர் புடின் தயாராக இருக்கிறார்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.



அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினை அலாஸ்காவில் சந்தித்து பேச உள்ளார். அப்போது 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் வலியுறுத்த இருக்கிறார். இந்நிலையில் நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது:

நான் 6 மாதங்களுக்குள் 6 போர்களைத் தீர்த்துவிட்டேன். இந்தியா-பாகிஸ்தான் போரின் போது 6 முதல் 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவை அணு ஆயுதம் ஏந்தத் தயாராக இருந்தன. நாங்கள் அதைத் தீர்த்தோம். போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயாராக உள்ளது.



சமாதானம் செய்ய ரஷ்ய அதிபர் புடின் தயாராக இருக்கிறார். அதேபோல், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமாதானம் செய்வார் என்று நான் நினைக்கிறேன். அலாஸ்காவில் புடினுடனான ஒரு முக்கியமான சந்திப்பு.
நாங்கள் உக்ரைனுக்கு எந்தப் பணத்தையும் செலுத்தவில்லை. ஆனால் நாங்கள் ராணுவ உபகரணங்களை வழங்குகிறோம். உக்ரைன்- ரஷ்யா போர் தொடங்கியது போது நான் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் ஒருபோதும் நடந்திருக்காது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.




உலகின் சந்தையை...!





இளைஞர்கள் உற்பத்தித்துறையில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தியதன் மூலம் பல கோடி மக்களின் உயிரை காப்பாற்றினோம். உலகின் சந்தையை இந்தியா ஆள வேண்டும். தகவல் தொழில்நுட்பம் முதல் சைபர் பாதுகாப்பு வரை தற்சார்பு நிலையை கொண்டு வருவோம்.

அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு கதவுகள் திறந்துள்ளன. வெளிநாடுகளின் சமூக வலைதளங்களை நாம் ஏன் சார்ந்திருக்க வேண்டும்? சொந்த நாட்டின் சமூக வலைதளம் குறித்து நமது இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement