ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பங்கேற்கும்: தெளிவுபடுத்தியது விளையாட்டு அமைச்சகம்

புதுடில்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்தமாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி 8 அணிகள் பங்கேற்கின்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்தியா விளையாடுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் விளையாடும் என்பதை இன்று தெளிவுபடுத்தி உள்ளது.
செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கிறது. இந்த தொடரில் பாகிஸ்தானுடன் மற்ற 7 அணிகளும் விளையாட உள்ளதால், இந்திய அணி பங்கேற்பதை தடுக்க மாட்டோம் என்று விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் அணி வீரர்கள், இந்தியாவிலும் இருதரப்பு போட்டிகளில் கலந்துகொள்வதை தடை செய்யும் புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் நடந்தாலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருதரப்பு போட்டிகளில் விளையாட அனுமதிக்காது. இந்த கொள்கை உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும்
-
'நேரத்துக்கு வந்திருக்கணும்!'
-
லிபுலேக் கணவாய் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது நேபாளம்
-
அறியாமையில் பேசுகிறார்கள்: விஜய்க்கு இபிஎஸ் பதிலடி
-
உக்ரைன், மேற்காசியாவில் அமைதி; பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை
-
ரஷ்ய அதிபர் புடினுடன் ஜெய்சங்கர் ஆலோசனை
-
துணை ஜனாதிபதி தேர்தல்: கூடுதல் செயலாளர்கள் இருவர் நியமனம்