ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு சிறை; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ''தனி நபரோ அல்லது கூட்டமாகவோ ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்'' என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வருகைக்காக, துறையூர் நகரப்பகுதியில், ஏராளமானோர், திரண்டிருந்தபோது, நேற்றிரவு 7:00 மணியளவில், அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. ஏற்கனவே, பிரசார கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்த நிலையில், நேற்று, மீண்டும் ஆம்புலன்ஸ் வந்ததால், அ.தி.மு.க.,வினர், அந்த வாகனத்தை வழி மறித்தனர்.
உள்ளே, நோயாளி யாரும் இல்லாததால், ஆத்திரமடைந்தனர். வேண்டுமென்றே பழனிசாமி கூட்டத்துக்குள் ஆம்புலன்சை ஓட்டி வருவதாக கூறி, டிரைவருடன் தகராறு செய்தனர். விபத்து நடந்ததாக தகவல் வந்ததால், ஆம்புலன்சை கொண்டு செல்வதாக, டிரைவர் தெரிவித்தார். உடனே, போலீசார், அ.தி.மு.க., வினரை விலக்கி விட்டு, வந்த வழியிலேயே ஆம்புலன்சை திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) ''தனி நபரோ அல்லது கூட்டமாகவோ ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்'' என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், 'ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்புலன்ஸில் ஏற்படும் சேதாரங்களுக்கான தொகையையும் நீதிமன்றத்தில் செலுத்த நேரிடும்' என எச்சரித்துள்ளது.
வாசகர் கருத்து (17)
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
25 ஆக்,2025 - 17:04 Report Abuse

0
0
Reply
Ram pollachi - ,
25 ஆக்,2025 - 17:03 Report Abuse

0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
25 ஆக்,2025 - 16:06 Report Abuse

0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
25 ஆக்,2025 - 16:06 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
25 ஆக்,2025 - 15:55 Report Abuse

0
0
Reply
vadivelu - thenkaasi,இந்தியா
25 ஆக்,2025 - 14:48 Report Abuse

0
0
Reply
S Balak - ,
25 ஆக்,2025 - 14:45 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
25 ஆக்,2025 - 14:26 Report Abuse

0
0
Reply
Sundar R - ,இந்தியா
25 ஆக்,2025 - 14:23 Report Abuse

0
0
Reply
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
25 ஆக்,2025 - 14:19 Report Abuse

0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
பள்ளி ஆசிரியர் நியமன மோசடி: மேற்கு வங்கத்தில் திரிணமுல் எம்எல்ஏ கைது
-
காமன்வெல்த் பளு தூக்குதல்; தங்கம் வென்று மீராபாய் சானு அசத்தல்
-
ஜாதி, மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை; பாகிஸ்தானை விளாசிய ராஜ்நாத் சிங்
-
வரலாற்றில் முதல்முறை; ஒரே நாளில் இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
-
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழக ஆசிரியர்கள் இருவர் தேர்வு
-
பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த உதவிக்கரம்: அறிவித்தார் பிரதமர் மோடி
Advertisement
Advertisement