தென்னிந்தியாவில் வெகு விரைவில் புல்லட் ரயில் சேவை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

விசாகப்பட்டினம்: ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூரு நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது;
மிக விரைவில் தென்னிந்தியாவுக்கு புல்லட் ரயில் சேவை வர இருக்கிறது. இதுபற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த புல்லட் ரயில், ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூரு நகரங்களை இணைக்கும்.
5 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மிக பெரிய சந்தையாக மாறும். இது நிச்சயம் நடக்கும்.
இவ்வாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.
முன்னதாக, மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2027ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், குஜராத்தில் இந்த ரயில் திட்டங்களுக்கான ரயில் நிலையங்கள் கட்டுமானங்கள் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் கூறி இருந்தது.








மேலும்
-
வடக்கு மண்டல அணி முன்னிலை: அங்கித், யாஷ் துல் சதம்
-
உலக விளையாட்டு செய்திகள்
-
நான்காவது சுற்றில் ஜோகோவிச்: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்
-
சாத்விக்-சிராக் அபாரம்: உலக பாட்மின்டனில் பதக்கம்
-
முன்னாள் எம்எல்ஏவுக்கான பென்ஷனுக்கு விண்ணப்பித்த ஜக்தீப் தன்கர்
-
வளர்ந்த நாடு என்ற இலக்கை நோக்கி நகரும் இந்தியா; சிவராஜ்சிங் சவுகான்