தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.680 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.77,640

சென்னை: சென்னையில் இன்று (செப் 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77 640க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,705க்கு விற்பனை ஆகிறது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து, 9,620 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 76,960 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (செப் 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77 640க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,705க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.78 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும்
-
வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்: முதல்வரை சாடிய நயினார் நாகேந்திரன்
-
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்புக்கு எதிரான வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
-
ஷாங்காய் மாநாட்டில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான்; மாஸ் காட்டிய இந்தியா
-
இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் ரஷ்யா, சீனா; அலறும் அமெரிக்கா!
-
முடிசூடும் பெருமாளை 'God of Hair Cutting' என்று மொழி பெயர்ப்பதா: அண்ணாமலை ஆவேசம்!
-
2025: 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட்