நான் அப்படி சொல்லவே இல்லை: சர்ச்சை எம்பி மஹூவா மொய்த்ரா சமாளிப்பு

கோல்கட்டா: அமித் ஷா குறித்து தான் பேசிய பேச்சுக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக திரிணமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வங்கதேசத்தினர் ஊடுருவல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திரிணமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
"வங்கதேசத்தினரின் ஊடுருவலை தடுக்க முடியாவிட்டால், அமித் ஷாவின் தலையை வெட்டி உங்கள் (பிரதமர்) மேஜையில்தான் வைக்க வேண்டும். வேறு வழியில்லை," என்று மஹூவா பேசினார்.
இந்த நிலையில், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், போலீசார் தனது பேச்சை திரித்து விட்டதாகவும் திரிணமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; வங்காள மொழியில், 'மாதா காட்டா ஜாவா', 'மாதா கே டெபி லே ரகா' என்று சொன்னேன். அதற்கு பொறுப்பேற்பது, பொறுப்பை ஏற்றுக்கொள்வது என்று பொருள்படும். இது ஒரு பழமொழி. நிச்சயமாக, முட்டாள்களுக்குப் பழமொழிகள் புரியாது," என்று கூறியுள்ளார்.
சர்ச்சை பேச்சுக்காக அவர் மீது சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசார் வழக்கு பதிந்த நிலையில், இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (2)
Mahendran Puru - Madurai,இந்தியா
01 செப்,2025 - 14:44 Report Abuse

0
0
Reply
Balachandran Rajamanickam - ,இந்தியா
01 செப்,2025 - 12:27 Report Abuse

0
0
Reply
மேலும்
-
வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்: முதல்வரை சாடிய நயினார் நாகேந்திரன்
-
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்புக்கு எதிரான வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
-
ஷாங்காய் மாநாட்டில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான்; மாஸ் காட்டிய இந்தியா
-
இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் ரஷ்யா, சீனா; அலறும் அமெரிக்கா!
-
முடிசூடும் பெருமாளை 'God of Hair Cutting' என்று மொழி பெயர்ப்பதா: அண்ணாமலை ஆவேசம்!
-
2025: 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட்
Advertisement
Advertisement