அரசு பஸ் - ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்து; இரு குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

கொல்லம்: கேரளாவில் அரசு பஸ் மற்றும் ஜீப் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலை நோக்கி கேரள அரசு பஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. எதிரே வேகமாக வந்த தார் ஜீப்பும் பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், தேவலக்கரையைச் சேர்ந்த பிரின்ஸ் தாமஸ் என்பவரும், இரு குழந்தைகளும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டும் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒச்சிறை போலீஸார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (1)
K Jayaraman - ,
04 செப்,2025 - 11:51 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராடணும்: சிங்கப்பூர் பிரதமர் சந்திப்புக்கு பிறகு மோடி வலியுறுத்தல்
-
பறவை மோதியது: பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து
-
தமிழகத்தில் வரும் செப் 8, 9ல் கனமழைக்கு எச்சரிக்கை: வானிலை மையம்
-
பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்: ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு இபிஎஸ் வரவேற்பு
-
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல்; சென்னை ஐஐடி முதலிடம்
-
வரி ஏய்ப்பு புகார்: சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
Advertisement
Advertisement