கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி காஞ்சி வீரர்களுக்கு 32 பதக்கங்கள்

காஞ்சிபுரம்:தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில், காஞ்சிபுரம் வீரர்கள் 10 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம், மொத்தம் 32 பதக்கங்களை வென்றுள்ளனர்.
தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில் ஆக., 27 முதல், 31 வரை நடந்தது. இதில் 7 - 9 வயது வரை சிறுவர் பிரிவிலும், 10 - 15 வயது வரை கேடட்ஸ் பிரிவிலும், பாயின்ட் பைட்டிங், லைட் கான்டாக்ட், கிக் லைட், ஃபாம்ஸ் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், தமிழகம் உட்பட 28 மாநிலங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இப்போட்டியில், தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில், 200 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட கிக் பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில், ஒன்மேன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த 24 வீரர் - வீராங்கனையர் போட்டியில் பங்கேற்றனர். இதில் 10 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம், மொத்தம் 32 பதக்கங்களை வென்றுள்ளனர்.
மேலும்
-
வாணியம்பாடியில் மரச்சாமான் கடையில் பயங்கர தீ விபத்து
-
இபிஎஸ் அடுத்த கட்ட பிரசாரம் செப்.17ல் துவக்கம்
-
இந்தியாவுக்கு ஆதரவான மக்கள் பிரசாரத்திற்கு ஆதரவு; எலான் மஸ்கை வம்பிழுத்த டிரம்ப் ஆலோசகர்
-
ராணுவ பயிற்சி நிறைவு அணிவகுப்பு மகிழ்ச்சியில் திளைத்த இளம் வீரர்கள்
-
காங்கிரஸ் தலைவர் வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்!
-
கோவிலில் ஆர்.எஸ்.எஸ்., கொடி அலங்காரம் நிர்வாகிகள் 27 பேர் மீது வழக்குப்பதிவு