வாணியம்பாடியில் மரச்சாமான் கடையில் பயங்கர தீ விபத்து

வாணியம்பாடி: வாணியம்பாடியில் மரச்சாமான்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
இதுபற்றிய விவரம் வருமாறு:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் மரச்சாமான்கள் கடை ஒன்று உள்ளது. சம்பத் என்பவர் இதன் உரிமையாளர். இங்கு பர்னிச்சர்களையும் அவர் விற்பனை செய்து வருகிறார்.
இன்று அதிகாலை கடையில் திடீரென தீப்பற்றியது. மளமளவென தீ கடை முழுவதும் பரவியது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.
பல மணி நேரம் போராடி அவர்கள் தீயைக் கட்டுப்படுத்தினர். இருப்பினும், கடையில் வைக்கப்பட்டு இருந்த தேக்கு மரக்கட்டைகள், மரச்சாமான்கள், இயந்திரங்கள் எரிந்து சேதம் அடைந்தன. இந்த பொருட்களின் மதிப்பு பல லட்சம் என்று தெரிகிறது.
தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இருப்பினும், மின்கசிவே விபத்துக்ககு காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
ஹெலிகாப்டர்களுக்கு கிராக்கி: பீஹார் தேர்தல் பிரசாரத்திற்கு ரெடியாகும் அரசியல் தலைவர்கள்
-
ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை: இனி எச்சரிக்கை கிடையாது என்கிறார் டிரம்ப்
-
பொருளாதார தடைகளை விதிக்கணும்; புடின் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்கிறார் ஜெலன்ஸ்கி
-
பூச்சிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
-
4 மாவட்டங்களில் இன்று கன மழை
-
வர்த்தக யுத்தத்தில் இறங்கும் சுதேசி நிறுவனங்கள்