தடுப்பு இல்லாத குளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் சாலையோரம், பிள்ளைப்பாக்கத்தில் தடுப்பு இல்லாத குளத்தால், விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் நெடுஞ்சாலையானது, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்கா இந்த சாலையையொட்டி இருப்பதால், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாக உள்ளது.
தவிர, சுற்றுவட்டார கிராமத்தினர், இந்த சாலை வழியே ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், காஞ்சி புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். இந்த சாலையில், பிள்ளைபாக்கம் சிப்காட் திட்ட அலுவலகம் அருகே குளம் அமைந்துள்ளது.
நெடுஞ்சாலையோரம் தடுப்பு இல்லாத குளத்தால், சாலையில் செல்லும் வாகனங்கள், குளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையோரம் உள்ள குளத்திற்கு, தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
வாணியம்பாடியில் மரச்சாமான் கடையில் பயங்கர தீ விபத்து
-
இபிஎஸ் அடுத்த கட்ட பிரசாரம் செப்.17ல் துவக்கம்
-
இந்தியாவுக்கு ஆதரவான மக்கள் பிரசாரத்திற்கு ஆதரவு; எலான் மஸ்கை வம்பிழுத்த டிரம்ப் ஆலோசகர்
-
ராணுவ பயிற்சி நிறைவு அணிவகுப்பு மகிழ்ச்சியில் திளைத்த இளம் வீரர்கள்
-
காங்கிரஸ் தலைவர் வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்!
-
கோவிலில் ஆர்.எஸ்.எஸ்., கொடி அலங்காரம் நிர்வாகிகள் 27 பேர் மீது வழக்குப்பதிவு