கண்டன ஆர்ப்பாட்டம் 

புதுச்சேரி:புதுச்சேரி அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் மற்றும் பென்ஷன் வழங்கப்படவில்லை.

இதனை கண்டித்து, அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆசிரியர் தினமான நேற்று காமராஜர் மணிமண்டபம் எதிரே கருப்பு பட்டை அணிந்து க ண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு துணை தலைவர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் சீத்தா லட்சுமி முன்னிலை வகித்தனர்.

அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement