பங்காரு திருப்பதியில் பக்தர்கள் விடுதி திறப்பு
தங்கவயல்: பேத்தமங்களா அருகே உள்ள குட்டஹள்ளியில் பங்காரு திருப்பதி எனும் வெங்கட ரமண சுவாமி கோவிலில் பக்தர்கள் ஓய்வெடுக்கவும், தங்குவதற்கும் 70 லட்சம் ரூபாய் செலவில் 4 அறைகள் கட்டப்பட்டன.
இவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா திறந்து வைத்தார். கோவில் நிர்வாக அதிகாரி சீனிவாச ரெட்டி, அசோக் கிருஷ்ணப்பா, லட்சுமி நாராயணா உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement