புரோ கபடி: தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி

விசாகப்பட்டனம்: புரோ கபடி லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 45-37 என, மும்பை அணியை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் மும்பை, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. மும்பை வீரர்களை இரண்டு முறை 'ஆல்-அவுட்' செய்த தெலுங்கு டைட்டன்ஸ் அணி, முதல் பாதி முடிவில் 27-11 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட மும்பை அணிக்கு 26 புள்ளி கிடைத்தது. ஆட்டநேர முடிவில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 45-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 'ஆல்-ரவுண்டர்' பரத் (13 புள்ளி), சேட்டன் சஹு (6), கேப்டன் விஜய் மாலிக் (5) கைகொடுத்தனர். மும்பை அணி சார்பில் கேப்டன் சுனில் குமார், சதிஷ் கண்ணன் தலா 6 புள்ளி பெற்றனர்.
மற்றொரு லீக் போட்டியில் புனே அணி 43-32 என, உ.பி., அணியை வீழ்த்தியது.
இதுவரை விளையாடிய 5 போட்டியில், 3 வெற்றி, 2 தோல்வி என 6 புள்ளிகளுடன் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. இரண்டாவது தோல்வியை பெற்ற மும்பை அணி (6 புள்ளி) 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. புனே அணி (8 புள்ளி) முதலிடத்தில் உள்ளது.
மேலும்
-
பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் ஒன்று சேர முடியுமா... * இந்திய ரசிகர்கள் கொந்தளிப்பு * பி.சி.சி.ஐ.,க்கு கடும் எதிர்ப்பு
-
ஜோரா ஈட்டி எறிவாரா நீரஜ் சோப்ரா... * உலக தடகளத்தில் தங்கம் வெல்வாரா
-
உலக விளையாட்டு செய்திகள்
-
புரோ கபடி: பெங்களூரு அணி வெற்றி
-
மத்திய மண்டலம் ரன் குவிப்பு: துலீப் டிராபி பைனலில்
-
குகேஷ்-திவ்யா 'டிரா' * கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில்...