கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்

சூளகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கம் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் வர்ஷா மற்றும் அதிகாரிகள், சூளகிரி அடுத்த அட்டகுறுக்கி அருகே, நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர்.

அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், சூளகிரியிலிருந்து ஓசூருக்கு, 1.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2 கிரானைட் கற்களை கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement