இது காங்கிரஸ் ஆட்சியில் செய்ததை விட 16 மடங்கு அதிகம்: பிரதமர் மோடி பெருமிதம்

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசம் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ரூ.1 லட்சம் கோடியைப் பெற்றுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெற்றதை விட 16 மடங்கு அதிகம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
அருணாச்சலப் பிரதேசத்திற்கு சென்ற பிரதமர் மோடி ரூ.5,100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அவர் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் வரி செலுத்துவோர் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அவர்களிடம் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஏற்பட்ட நன்மைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் இட்டாநகரில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:






2 லோக்சபா தொகுதிகள்
சூரியனின் கதிர்கள் முதலில் விழும் இடம் அருணாச்சலப் பிரதேசம் என்றாலும், இங்கு வளர்ச்சி ஏற்பட பல ஆண்டுகள் ஆனது. அருணாச்சலப்பிரதேசத்தில் குறைவான மக்கள் மட்டும வசிக்கின்றனர். இங்கு இரண்டு லோக்சபா தொகுதிகள் மட்டுமே உள்ளது என காங்கிரஸ் புறக்கணித்தது. இது போன்ற காங்கிரசின் மனநிலை அருணாச்சலப்பிரதேசம் உட்பட வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவித்தது.
16 மடங்கு
அருணாச்சலப் பிரதேசம் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ரூ.1 லட்சம் கோடியைப் பெற்றுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெற்றதை விட 16 மடங்கு அதிகம். டில்லியில் அமர்ந்தபடியே வடகிழக்கு மாநிலத்தை மேம்படுத்த முடியாது என்பதை அறிந்திருந்ததால், அமைச்சர்கள், அதிகாரிகளை அடிக்கடி அந்தப் பகுதிக்கு அனுப்பினேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


மேலும்
-
சிறுபான்மையினர் பிரச்னை என்றால் ‛‛ஆக்டிவ் மோடு'', தமிழக பிரச்னைனா ‛‛கோமா மோடு'': சினிமா போராளிகளின் ‛‛டபுள் ஆக்ட் பாலிடிக்ஸ்''
-
நிலத்தை அளவீடு செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் விஏஓ!
-
சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை: இந்தாண்டு பலி எண்ணிக்கை 248 ஆக உயர்வு
-
விஜயை பின்னணியில் இருந்து பாஜ இயக்குகிறது; சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
-
ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலி: ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு
-
கோவை, நீலகிரி, தேனி உட்பட 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை