கவர்னர் ஆகிறாரா கட்கரி?

டில்லி அரசியல் வட்டாரங்களில் வதந்திகளுக்கு பஞ்சம் கிடையாது. தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சம்பந்தப்பட்டது.
இவர் ஓரம் கட்டப்பட்டுவிட்டார். மத்திய அமைச்சர்கள் சிலர் கவர்னர்களாக அனுப்பப்பட உள்ளனர். அந்த பட்டியலில் கட்கரி பெயரும் உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்து பயன்படுத்த வேண்டும் என, ஒரு திட்டத்தை நாடு முழுதும் செயல்படுத்தினார் கட்கரி. இதனால் பெட்ரோல் இறக்குமதி குறையும். சுற்றுச்சூழல் மேம்படும். கரும்பு விவசாயிகள் பயனடைவர் என்பது கட்கரியின் வாதம்.
இதனால், கட்கரிக்கு எதிராக செய்திகள் வர ஆரம்பித்தன. இவருடைய இரண்டு மகன்களும் எத்தனால் தொழிற்சாலை நடத்துகின்றனர். அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார் என செய்திகள் வெளியாகின.
'எனக்கு எதிராக பெட்ரோல் லாபி செயல்படுகிறது. என் மகன்கள் தொழிற்சாலை நடத்துவது உண்மைதான். அவர்களுக்கு நான், 'அட்வைஸ்' மட்டுமே செய்கிறேன். எத்தனால் விவகாரம் குறித்து முடிவெடுப்பது மத்திய அமைச்சரவை தான்' என, விளக்கம் அளித்துள்ளார் கட்கரி.
தன் சொந்த ஊரான நாக்பூரிலேயே கடந்த ஒரு வாரமாக தங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் நடைபெறும். அப்போது கட்கரி மாற்றப்படுவார் என மீடியாவில் செய்திகள் கசியவிடப்படுகின்றன.
ஏற்கனவே மோடிக்கும், கட்கரிக்கும் ஆகாது என சொல்லப்படுகிறது. ஆனால், இவருக்கு ஆர்.எஸ்.எஸ்., பலத்த ஆதரவு அளித்து வருகிறது. எனவே, கட்கரி மீது மோடி கை வைக்க மாட்டார் எனவும் ஒரு சாரார் சொல்கின்றனர்.








மேலும்
-
அரசியல் கட்சி கூட்டத்திற்கு இனிமே ஒரு கண்ட்ரோல் வேணும்; 2 மகள்களை இழந்த தந்தை வேதனை
-
கரூர் சம்பவம் தமிழகத்திற்கு ஒரு கருப்பு நாள்; பிரேமலதா உருக்கம்
-
கரூர் கலெக்டர், எஸ்பி இருவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: அண்ணாமலை
-
சுதேசி பொருட்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடுங்கள்; மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
-
இபிஎஸ் பிரசாரத்துக்கு கொடுத்ததை விட விஜய்க்கு அதிக பாதுகாப்பு தரப்பட்டது; ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்
-
கரூர் சம்பவத்தில் யாரும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது; திருமா