பொங்கலுாரில் 3ல் கடையடைப்பு

பொங்கலுார்; பொங்கலுாரில் உள்ள சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் பொங்கலுார் எஸ்.ஜே. மகாலில் நடந்தது. பொங்கலுார் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். இதில் வரும் அக். 3ம் தேதி கடையடைப்பு, ஆட்டோ, வேன், கார், லாரி வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதில் முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், சுங்கச்சாவடி எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement