இணைப்பு கால்வாய் மாயம்: வெள்ள நீர் புகும் அச்சம்
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே இணைப்பு கால்வாய் மாயமானதால் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளது.
இவ்வொன்றியத்தில் அணைக்கரைப்பட்டி பாலாற்று பாலத்தில் இருந்து, சிங்கம்புணரி உப்பாறு பாலத்துக்கு இடைப்பட்ட பகுதியில் ஒரு இணைப்பு கால்வாய் உள்ளது. மழைவெள்ள காலங்களில் பாலாற்றில் ஓடும் உபரி நீர் இக்கால்வாய் வழியாக வந்து உப்பாற்றில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இக்கால்வாய் சில இடங்களில் மண்மூடியும் ஆக்கிரமிக்கப்பட்டும் இருந்த இடமே தெரியாமல் போனது. இதனால் மழை காலங்களில் பாலாற்றில் வெள்ளம் வரும் போது ஓசாரிபட்டி, பாரதி நகர் உள்ளிட்ட குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. எனவே இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட இணைப்புக் கால்வாயை மீட்டு சீரமைக்க பொதுப்பணித்துறையினர் முன்வரவேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கரூர் துயரம்: போலீசாரின் அறிவுரைகளை தவெகவினர் ஏற்கவில்லை; அரசு அதிகாரிகள் பேட்டி
-
பீஹார் தேர்தல் களம் சூடுபிடித்தது; இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: விரைவில் தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு
-
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு
-
பாக் துணை ராணுவப் படை தலைமையகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு: 10 பேர் பலி
-
சங்குமுகத்தில் உயிரிழந்த கடல் ஆமை
-
கரூர் சம்பவத்தில் வெளிப்படை விசாரணை தேவை: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
Advertisement
Advertisement