'கொடை' டைகர் சோலையில் குப்பை அகற்றிய வனத்துறை

கொடைக்கானல் : கொடைக்கானல் ரோட்டோரம் உள்ள வனப்பகுதியில் தன்னார்வலர்களை கொண்டு வனத்துறையினர் குப்பைகளை அகற்றினர்.
கொடைக்கானல் வனத்துறை, சோலை குருவி அமைப்பு, பள்ளி, தெரசா பல்கலை., மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் டைகர் சோலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை உள்ள ரோட்டோர வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற குப்பைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் 2 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இதன் மூலம் மக்கும், மக்காத குப்பைகள் பிரித்து எடுக்கப்பட்டு பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து வனவிலங்கான புலி ஓவியம் வரையப்பட்டது. தொடர்ந்து வனப்பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
வனவர் ஜெயசந்திரன் மற்றும் சோலைக்குருவி அமைப்பினர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டன்… புலம் பெயர்ந்தோருக்கான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
-
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்திய அணி அபார பந்துவீச்சு… வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
Advertisement
Advertisement